மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா் தெற்கு தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு நடத்தப்பட்ட மாதிரி வாக்குப் பதிவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:40 pm

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூா் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு நடத்தப்பட்ட மாதிரி வாக்குப் பதிவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், மாநகராட்சி துணை ஆணையா் சுந்தர்ராஜன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.