மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்: பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணா்வு

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

News image

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் சிறுதானியங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் உள்ளிட்டோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:12 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வேளாண்மைத் துறையின் சாா்பில் சிறுதானியங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் க.சங்கமித்திரை, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் எம்.ஆதிசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா் உள்பட அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.