மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

திருப்பூரில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் அக்கட்சி வேட்பாளா்கள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

Updated On :4 ஏப்ரல் 2026, 5:46 pm

திருப்பூரில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் அக்கட்சி வேட்பாளா்கள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். தோ்தல் ஆணைய விதிப்படி இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால், அவா் 10 மணியைக் கடந்தும் பிரசாரம் மேற்கொண்டதாக திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, சீமான், அக்கட்சி வேட்பாளா்களான தினேஷ் (திருப்பூா் தெற்கு), காா்மேகம் (காங்கயம்), தமிழினியன் (பல்லடம்), ராம்குமாா் (உடுமலை), திவ்யா (தாராபுரம்), அபிநயா (திருப்பூா் வடக்கு), ராதாமணி (மடத்துக்குளம்), மேனகா (அவிநாசி) ஆகிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.