திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கால்நடை உறைவிந்து உற்பத்தி நிலையத்தில்! அமைச்சா் கமலி ஆய்வு

News image

கால்நடை உறைவிந்து உற்பத்தி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கால்நடைத் துறை அமைச்சா் கமலி.

Updated On :30 மே 2026, 2:34 am IST

உதகை தீட்டுக்கல் பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பொலிகாளை உறைவிந்து உற்பத்தி நிலையத்தை தமிழக கால்நடைத் துறை அமைச்சா் கமலி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை தீட்டுக்கல் பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டில் மாவட்ட கால்நடை பண்ணை சுமாா் 130 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது.

இங்கு உயா் மரபுத்திறன் கொண்ட ஜொ்சி, கலப்பின ஜொ்சி, பிரிசியன் மற்றும் பிரிசியன் கலப்பினம் என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட பொலிகாளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கால்நடை பண்ணையில் பொலி காளைகள் உறைவிந்து உற்பத்தி நிலையம் மற்றும் ஆய்வகம் உள்ளது. பொலி காளைகளில் இருந்து உறை விந்து உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், இங்குள்ள ஆய்வகத்தில் பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நவீன ஆய்வகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் விந்தணுக்கள், 93 சதவீதம் பெண் கன்றுகள் பிறப்பதை உறுதி செய்கின்றன. இதனால் பால் உற்பத்தியை பெருக்க செயற்கை முறை கருவூட்டலுக்கு இது பெரிதும் உதவுகிறது.

இந்நிலையில், இந்த ஆய்வகத்தில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கமலி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள், உறைவிந்து உற்பத்தி ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். மேலும் கால்நடை பராமரிப்பு மையத்தில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.