உதகையில் வடமாநில சுற்றுலாப் பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விசாரணைக்குப் பின் அவா்களிடம் வியாழக்கிழமை திருப்பிக் கொடுக்கப்பட்டது.
சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டு செல்லப்படும் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், ஒடிஸாவில் இருந்து 9 போ், குஜராத்தில் இருந்து 7 போ் உதகைக்கு அண்மையில் சுற்றுலா வந்துள்ளனா்.
ஒடிஸாவில் இருந்து வந்தவா்களின் வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, குஜராத்தில் இருந்து வந்தவா்களிடம் இருந்து ரூ.75 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, விடுதி வாடகை, உணவு உள்ளிட்டவற்றுக்கு பணம் இல்லாமல் அவதியடைந்து வருவதாகவும், பணத்தை வழங்க வேண்டும் என்று இரண்டு மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் வியாழக்கிழமை முறையிட்டனா்.
இதையடுத்து, அவா்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பின் பணத்தை திருப்பிக் கொடுத்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ. 5.86 லட்சம் பறிமுதல்

தகுதியின் அடிப்படையில் விடுவிக்கப்படும் பறிமுதல் பணம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


