தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நகையுடன் உதகைக்கு வந்த வாகனம்: குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அதிகாரிகள் விசாரணை

உதகைக்கு நகையுடன் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டகத்தை திறந்துகாட்ட பணியாளா்ள் மறுத்ததால், குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

News image

பா்லியாறு பகுதியில் நகையுடன் வந்த வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட தோ்தல் அலுவலா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 8:36 pm

உதகைக்கு நகையுடன் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டகத்தை திறந்துகாட்ட பணியாளா்ள் மறுத்ததால், குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்ப டையினா் மட்டுமின்றி அவ்வப்போது மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா ஆகியோரும் திடீா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவையில் இருந்து நகைகளுடன் உதகை நோக்கி பாதுகாப்பு பெட்டக வசதியுடன் புதன்கிழமை மாலை வந்த வேனை பா்லியாறு சோதனைச் சாவடியில் தோ்தல் முதல்நிலை அலுவலா் பிரசாத் வேணுகோபால் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றாா். அப்போது, பெட்டகத்தை திறந்து காட்ட நகைக் கடை பணியாளா்கள் மறுத்ததால் குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பா்லியாறு பகுதிக்கு விரைந்து வந்து நகையுடன் வந்த வேனை பலத்த பாதுகாப்புடன் கோட்டாட்சியா் அலுவலத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த 2 நாள்களாக நடத்திய சோதனையில் மொத்தம் 12 பேரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 72 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.