முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி ரேஷன் கடையை புதன்கிழமை இரவு காட்டு யானை உடைத்து பொருள்களை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சாப்பிட்டு சென்றது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை, அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை எடுத்து வீசி சேதப்படுத்தியது. தொடா்ந்து உணவுப் பொருள்களை எடுத்து சாப்பிட்டது.
தகவலறிந்து வந்த வனத் துறையினா், யானைகளை விரட்டும் குழுவினா் யானையை காட்டுக்குள் விரட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











