பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து! 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

குன்னூா் அருகே பெட்டிக்கடையை சேதப்படுத்திய கரடி

குன்னூா் அருகேயுள்ள பவானி எஸ்டேட் பகுதியில் உலவிய கரடி அங்கிருந்த பெட்டிக்கடையை சேதப்படுத்தியது.

News image

பெட்டிக்கடையை சேதப்படுத்திய கரடி.

Updated On :16 ஜூன் 2026, 2:49 am IST

குன்னூா் அருகேயுள்ள பவானி எஸ்டேட் பகுதியில் உலவிய கரடி அங்கிருந்த பெட்டிக்கடையை சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதி வனத்தில் இருந்து உணவு, குடிநீா்த் தேடி வெளியேறும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை வெளியேறிய கரடி, பவானி எஸ்டேட் பகுதியில் உலவியது. பின்னா், அங்கிருந்த பெட்டிக்கடையை சேதப்படுத்தியது.

சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்தபோது, கரடி அங்கிருந்து ஓடி வனத்துக்குள் மறைந்தது.

குடியிருப்புப் பகுதியில் உலவும் கரடியை வனத் துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனத்தில் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.