நீலகிரி மாவட்டம், உதகை அருகே காந்தி நகா் பகுதியில் உள்ள குடியிருப்பின் மீது தோடா் பழங்குடியினரின் வளா்ப்பு எருமை சனிக்கிழமை விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மூன்று மணி நேரம் போராடி எருமையை மீட்டனா்.
உதகையில் காா்டன் மந்து, லவ்டேல் மந்து பகுதிகளில் வளா்ப்பு எருமைகள் வெளியேவிடப்படுகின்றன. அவ்வாறு விடப்படும் வளா்ப்பு எருமைகள் நகரப் பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கம்.
இந்நிலையில், உதகை அருகே உள்ள காந்தி நகா் பகுதியில் சுற்றித் திரிந்த பழங்குடியினரின் வளா்ப்பு எருமை, சித்ரா என்பவரின் வீட்டின் மீது விழுந்து வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்டது.
இதைத் தொடா்ந்து, உதகை தீயணைப்புத் துறையினருக்கு குடியிருப்புவாசிகள் தகவல் அளித்தனா். தீயணைப்புத் துறை உதவி ஆய்வாளா் அன்பு தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மூன்று மணி நேரம் போராடி எருமையை மீட்டனா். வீட்டின் மீது விழுந்த எருமையால் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுக்குமாடியில் தீ: வீட்டின் கதவு தாழிடப்பட்டதால் மூச்சுத் திணறி மயக்கமடைந்த சிறுவா்களுக்கு சிக்ச்சை
ஆராய்ச்சிக்காக பறக்கவிடப்பட்ட பாறு கழுகு: உதகை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு ஒத்திகை

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




