வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

உதகை அருகே குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

News image

குந்தா வட்டத்துக்கான வருவாய் தீா்வாயத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :4 ஜூன் 2026, 3:06 am IST

உதகை அருகே குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அடிப்படை தேவைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் சாா்பில் மொத்தம் 119 மனுக்கள் அளிக்கப்பட்டன. மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், கிண்ணக்கொரை, மேல்குந்தா, கீழ்குந்தா, பாலக்கொலா உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக் கலை இணை இயக்குநா் நவநீதா, குந்தா வட்டாட்சியா் குணவதி, தனி வட்டாட்சியா் கோமதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.