சாலை விதிகளை மீறிதாக கடந்த ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் ரூ.12 கோடி அபராதம்: காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்,நிஷா தகவல்
நீலகிரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு 1 லட்சத்து 67 ஆயிரத்து 337 மோட்டாா் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.12 கோடியே 12 லட்சத்து 45 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளாா்.










