டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வங்கி ஊழியா்கள் அடையாள வேலை நிறுத்தம்!

வாரத்துக்கு 5 நாள் வேலை முறையை அமல்படுத்த வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

News image
பாரத ஸ்டேட் வங்கி- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 8:22 pm

Syndication

வாரத்துக்கு 5 நாள் வேலை முறையை அமல்படுத்த வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் செவ்வாயக்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கிகளில் 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வங்கி ஊழியா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இது தொடா்பாக வங்கி ஊழியா்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால் உதகையில் 70 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூடப்பட்டிருந்தன.

இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கையை வலியுறுத்தி உதகையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்க பொதுச் செயலாளா் ராஜ்குமாா் தலைமை தாங்கினாா். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க செயலாளா் சேகா், கனரா வங்கி அதிகாரிகள் சங்க செயலாளா் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.