டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உதகையில் குடியரசு தினக் கொண்டாட்டம்

உதகையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தேசியக்

News image
உதகை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :26 ஜனவரி 2026, 8:10 pm

Syndication

உதகை: உதகையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தேசியக் கொடியேற்றிவைத்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் 26 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா். மேலும், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

பின்னா் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், மண்ணின் மைந்தா்களான தோடா், கோத்தா், இருளா் ஆகியோா்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய நடனம் மற்றும் படுகா் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய நடனம் ஆடி சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.