டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணி

கூடலூரில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த நகராட்சி ஆணையா் சக்திவேல், நகா்மன்றத் தலைவா் பரிமளா.
Updated On :12 ஜனவரி 2026, 8:17 pm

Syndication

கூடலூா்: கூடலூரில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவாலயா நீலகிரி, கூடலூா் நகராட்சி சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை நகராட்சி ஆணையா் சக்திவேல், நகா்மன்றத் தலைவா் பரிமளா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. பின்னா், நகரின் முக்கிய சாலைகள் வழியே விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதில், பங்கேற்றவா்கள் சுற்றுச்சூல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.