டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புகையில்லா போகி: மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள்

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புகையில்லா போகி கொண்டாட வேண்டுமென மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன்

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:07 pm

Syndication

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புகையில்லா போகி கொண்டாட வேண்டுமென மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழா் திருநாளான பொங்கல் திருநாளுக்கு முதல்நாள் வீட்டில் உள்ள தேவையில்லா பொருள்களை எரித்து ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற முதுமொழியின் அடிப்படையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அவ்வாறு பழைய பொருள்களை எரிப்பதால் உருவாகும் நச்சு வாயுக்கள் காற்றில் கரைந்து மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், தங்களிடம் உள்ள தேவையில்லாத பழைய பொருள்களை எரிக்காமல், அதை தூய்மைப் பணியாளா்களிடம் அளித்து புகையில்லா போகிப் பண்டிகையாக கடைப்பிடித்து சேலம் மாநகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.