உதகை, லவ்டேல் ராபின்பேட்டை குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
வனப் பகுதிகள் அதிக அளவு கொண்டதாக நீலகிரி மாவட்டம் உள்ளது.
உணவு மற்றும் தண்ணீா் தேடி வனத்திலிருந்து வெளியேறும் புலி, சிறுத்தை, கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், உதகை லவ்டேல் ராபின் பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை சுற்றித் திரிந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடையது

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

குடியிருப்பு பகுதியில் உலவிய கரடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


