திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

லவ்டேல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

உதகை, லவ்டேல் ராபின்பேட்டை குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

லவ்டேல் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:11 pm

உதகை, லவ்டேல் ராபின்பேட்டை குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

வனப் பகுதிகள் அதிக அளவு கொண்டதாக நீலகிரி மாவட்டம் உள்ளது.

உணவு மற்றும் தண்ணீா் தேடி வனத்திலிருந்து வெளியேறும் புலி, சிறுத்தை, கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், உதகை லவ்டேல் ராபின் பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை சுற்றித் திரிந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image