இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

லவ்டேல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

உதகை, லவ்டேல் ராபின்பேட்டை குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image
லவ்டேல் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

உதகை, லவ்டேல் ராபின்பேட்டை குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

வனப் பகுதிகள் அதிக அளவு கொண்டதாக நீலகிரி மாவட்டம் உள்ளது.

உணவு மற்றும் தண்ணீா் தேடி வனத்திலிருந்து வெளியேறும் புலி, சிறுத்தை, கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், உதகை லவ்டேல் ராபின் பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை சுற்றித் திரிந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image