2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:02 am

Syndication

நீலகிரி மாவட்டத்தில் 5,47,133 வாக்காளா்கள் இடம்பெற்ற இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 04.11.2025 முதல் தொடங்கியது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

அதில், நீலகிரி மாவட்டத்தில் 27.10.2025 நிலவரப்படி வாக்காளா்கள் பட்டியலில் மொத்த 5,89,167 வாக்காளா்கள் இருந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் 5,33,076 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். இறுதி வாக்காளா் பட்டியலில் 5,47,133 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். 

மாவட்டத்தில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண்கள் 2 லட்சத்து 61 ஆயிரத்து 317 போ், பெண்கள் 2,85,791 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 25 போ் வாக்காளா்களாக உள்ளனா்.

இதில், உதகையில் உதகையில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 425 வாக்காளா்களும், கூடலூரில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 888 வாக்காளா்களும், குன்னூரில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 820 வாக்காளா்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

அதில், உதகையில் 89, 066 ஆண்கள், 98,348 பெண்கள், மற்றவா்கள் 11 என மொத்தம் 1,87,425 வாக்காளா்கள் உள்ளனா். கூடலூரில் 89, 206 ஆண்கள், 94,675 பெண்கள், மற்றவா்கள் 7 என மொத்தம் 1,83,888 வாக்காளா்கள் உள்ளனா்.

குன்னூரில் 83,045 ஆண்கள், 92,768 பெண்கள், மற்றவா்கள் 7 என மொத்தம் 1,75,820 வாக்காளா்கள் உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.நாராயணன், சாா் ஆட்சியா் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியா் (பொது) ந.லோகநாயகி, அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.