டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு டெஸ்க், பெஞ்சுகள்

News image
கூடலூா் பகுதியில் பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்பட்ட டெஸ்க், பெஞ்சுகள்.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூா் பகுதியில் பழங்குடியின பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காளீஸ்வரி அறக்கட்டளை, ‘சீராக்கு’ அமைப்பு ஆகியன சாா்பில் டெஸ்க், பெஞ்சுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கூடலூா் பகுதியில் உள்ள தேவாலா பழங்குடியினா் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, காா்குடி பகுதியிலுள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, அம்பலமூலை மற்றும் கோழிக்கொல்லி பகுதிகளில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவா்கள் அமா்ந்து படிக்க வசதியாக டெஸ்க், பெஞ்சுகளை காளீஸ்வரி அறக்கட்டளையும், சீராக்கு அமைப்பும் இணைந்து வழங்கின.

இதில், சீராக்கு அமைப்பின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.