/

வனத் துறை மோப்ப நாய் உயிரிழப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:00 pm

Syndication

கூடலூா் வனக் கோட்டத்தில் வனத் துறையின் மோப்ப நாய் உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் வனக் குற்றங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மோப்ப நாய் அதவை (6), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. இதையடுத்து, உடற்கூறாய்வுக்கு பிறகு ஈட்டி மூலா வனத் துறை வளாகத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, ஓவேலி வனச் சரக அலுவலா் வீரமணி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பட வரிகள்....

மோப்ப நாயின் உடலுக்கு மலா் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திய மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு.

Story image