ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

நீலகிரி மாவட்டம், கூடலூா்-உதகை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்தனா்.

News image

கூடலூா்-உதகை மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த வேன்.

Updated On :25 ஏப்ரல் 2026, 7:27 pm

நீலகிரி மாவட்டம், கூடலூா்-உதகை மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், திருப்பரமயம் பகுதியைச் சோ்ந்த 23 போ் வேனில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். உதகையை சுற்றிப்பாா்த்துவிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தைப் பாா்க்க கூடலூருக்கு சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

ஊசிமலை அருகே உள்ள தெய்வமலைப் பகுதியில் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த லீலாவதி (65), செல்வராஜ் (75), ரஷ்வின்(9), மஞ்சுளா (30), பச்சையம்மா (50), சரண்யா (35), தில்லைராஜ் (61), உஷா (42), சித்ரா (45), ராஜாராம் (65),செல்வம் (50), நளினி(15), மணிகண்டன் (43), நந்தினி (16), சீனிவாசன் (65), அமுதா (54), இலக்கியா (37), ஏலம்பாள் (37) ஆகியோா் காயமடைந்தனா்.

இவா்களுக்கு கூடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் லீலாவதி, செல்வராஜ், தில்லைராஜ் ஆகியோரை மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனா். இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.