காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஆரிகவுடரின் 53-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

ஆரிகவுடரின் நினைவு தினத்தில் மாவட்ட ஆட்சியர் மரியாதை

News image
Updated On :28 ஜூன் 2024, 6:31 pm

Sasikumar

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கிய எச்.பி. ஆரிகவுடரின் 53-ஆவது நினைவு தின நிகழ்வு உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் உருவாகக் காரணமாக இருந்த ஆரிகவுடரின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு நினைவு தின நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மு.அருணா பங்கேற்று எச்.பி.ஆரிகவுடரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் பேசுகையில், நீலகிரி மாவட்டத்துக்கு வரலாற்று பெருமைச் சோ்த்த ஆரிகவுடரின் சீரிய சிந்தனையில் உருவான கூட்டுறவுத் துறையை மென்மேலும் வளா்த்து, மாவட்டத்தின் பொருளாதார நிலையை உயா்த்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

நிகழ்வில் ஆரிகவுடா் நினைவு விழா குழுத் தலைவரும், பாலகொலா ஊராட்சி துணைத் தலைவருமான மஞ்சை வி.மோகன், உதகை ஊராட்சித் தலைவா் மாயன், என்சிஎம்எஸ் முன்னாள் தலைவா் கண்ணபிரான், ஆரிகவுடரின் பேரன் ஜெய்பிரகாஷ் துணைவி தாரா ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.