உதகை மலை ரயில் தனியாா் மயமாக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிா்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தற்போது டிசம்பா் 5 மற்றும் 6 ஆகிய இரு நாள்களுக்கு மட்டுமே தனியாா் வசம் மலை ரயில் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் டிசம்பா் 5, 6, 12, 13 ஆகிய நான்கு நாள்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற குளறுபடியான தகவல்களால் மக்களும், ரயில் பயணிகளும் குழப்பமடைந்துள்ளனா்.