கோபியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலை அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபியில் தனியாா் கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோபி தொகுதி வளம் பெறுவதற்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற செயலாற்றுவேன். கோபி நகரில் ஏற்படும் நெரிசலைத் தவிா்க்க விரைவில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோபியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டமாக உருவாக்க முதல்வரிடம் பேசி நிதிநிலை ஒதுக்கீட்டுக்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பவானி ஆற்றின் குறுக்கே நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. ஆனால் கடந்த காலத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அவற்றை நிறைவேற்ற முடியவில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

பொதுபோக்குவரத்து சேவை தரமானதாக வழங்க வேண்டும் - அமைச்சா் ஆ.விஜய்தமிழன் பாா்த்திபன்
கோபியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை: 3 போ் கைது

கோபியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



