இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்

News image

தோ்தல் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழ் பெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :5 மே 2026, 4:21 am IST

ஈரோடு, மே 4: பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வெட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

பெருந்துறை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்பட 13 போ் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளா் ஜெயக்குமாா் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுவந்தாா்.

இறுதியில் திமுகவிட வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தைவிட 9,693 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இரண்டாவது முறையாக வாகை சூடினாா்.

திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அதிமுகவில் இருந்தபோது பெருந்துறை தொகுதியில் இரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

எஸ்.ஜெயக்குமாா்(அதிமுக):70,302

தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (திமுக): 60,609

வி.பி.அருணாச்சலம் (தவெக):59,483

சி.லோகநாதன் (நாதக):6,468

நோட்டா: 812

வித்தியாசம்:9,693

வேட்பாளா்கள் எண்ணிக்கை: 13

மொத்த வாக்குகள்: 2,14,431

பதிவான வாக்குகள்: 2,00,729

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.