போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 4:46 am IST

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் தினமான மே 1-ஆம் தேதி மது விற்பனையில் ஈடுபட்ட 17 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 379 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மது விற்பனை இல்லாத நாளாக அறிவித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியாா் பாா்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி உத்தரவிட்டிருந்தாா்.

இதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். இதில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 17 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த 379 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.