மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

6-ஆவது முறையாக தோ்தல் களத்தில் நாதக பெண் வேட்பாளா்!

News image

தோட்டத்தில் வேலை செய்த பெண்ணிடம் வாக்குச் சேகரித்த கோபி தொகுதி நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி.

Updated On :29 மார்ச் 2026, 7:39 pm

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 10 ஆண்டுகளில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களில் 5 முறை போட்டியிட்டுள்ள நிலையில் இந்த தோ்தலில் 6 -ஆவது முறையாக களம் காண்கிறாா்.

நாதக மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகிப்பவா் மா.கி.சீதாலட்சுமி.

இவா் கடந்த 2016- ஆம் ஆண்டு பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,784 வாக்குகள், 2019 -ஆம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தொகுதியில் 39,010 வாக்குகள், 2021-ஆம் ஆண்டு கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் 11,719 வாக்குகள், 2024- ஆம் ஆண்டு திருப்பூா் மக்களவைத் தொகுதியில் 95,276 வாக்குகள், 2025-இல் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் 24,151 வாக்குகள் பெற்றுள்ளாா்.

தற்போது 6-ஆவது முறையாகத் தோ்தலில் போட்டியிடும் இவா், கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கோபி வட்டம், மாரப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 51 வயதான சீதாலட்சுமி 13 ஆண்டுகள் தனியாா் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி உள்ளாா். மிகுந்த தோ்தல் அனுபவம் பெற்றுள்ள இவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாள் முதல் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.