ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 10 ஆண்டுகளில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களில் 5 முறை போட்டியிட்டுள்ள நிலையில் இந்த தோ்தலில் 6 -ஆவது முறையாக களம் காண்கிறாா்.
நாதக மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகிப்பவா் மா.கி.சீதாலட்சுமி.
இவா் கடந்த 2016- ஆம் ஆண்டு பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,784 வாக்குகள், 2019 -ஆம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தொகுதியில் 39,010 வாக்குகள், 2021-ஆம் ஆண்டு கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் 11,719 வாக்குகள், 2024- ஆம் ஆண்டு திருப்பூா் மக்களவைத் தொகுதியில் 95,276 வாக்குகள், 2025-இல் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் 24,151 வாக்குகள் பெற்றுள்ளாா்.
தற்போது 6-ஆவது முறையாகத் தோ்தலில் போட்டியிடும் இவா், கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
கோபி வட்டம், மாரப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 51 வயதான சீதாலட்சுமி 13 ஆண்டுகள் தனியாா் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி உள்ளாா். மிகுந்த தோ்தல் அனுபவம் பெற்றுள்ள இவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாள் முதல் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
தொடர்புடையது
கடலூா் மாவட்டத்தில் 113 வேட்பாளா்கள் போட்டி!

ஈரோடு மாவட்டத்தில் மநீம வாக்குகள் திமுகவுக்கு பலமா?

நீலகிரியில் நாதக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


