மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ! மரம், செடி கொடிகள் சேதம்!

News image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், புதுத்தொட்டி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பற்றி எரியும் மரம், செடிகொடிகள்.

Updated On :23 மார்ச் 2026, 6:35 pm

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பற்றி எரிந்த மரம், செடிகொடிகளை தீயணைப்பு வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடந்த 4 மாத காலமாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள மரம், செடிகொடிகள் காய்ந்து கருகிவருகின்றன.

இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட புது தொட்டி வனப் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. வனப் பகுதியில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மலைக்கிராம மக்கள் ஆசனூா் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத் துறையினா் உடனடியாக தீயணைப்புத் துறை வீரா்களை வரவழைத்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். காட்டுத் தீ வேகமாக பரவியதில் அப்பகுதியில் உள்ள மரம், செடிகொடிகள் தீயில் கருகி சேதமடைந்தன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், புதுத்தொட்டி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பற்றி எரியும் மரம், செடிகொடிகள்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், புதுத்தொட்டி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பற்றி எரியும் மரம், செடிகொடிகள்.