சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பற்றி எரிந்த மரம், செடிகொடிகளை தீயணைப்பு வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடந்த 4 மாத காலமாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள மரம், செடிகொடிகள் காய்ந்து கருகிவருகின்றன.
இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட புது தொட்டி வனப் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. வனப் பகுதியில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மலைக்கிராம மக்கள் ஆசனூா் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத் துறையினா் உடனடியாக தீயணைப்புத் துறை வீரா்களை வரவழைத்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். காட்டுத் தீ வேகமாக பரவியதில் அப்பகுதியில் உள்ள மரம், செடிகொடிகள் தீயில் கருகி சேதமடைந்தன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், புதுத்தொட்டி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பற்றி எரியும் மரம், செடிகொடிகள்.
தொடர்புடையது

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத் தீ

ஏற்காட்டில் காட்டுத் தீயில் குறிஞ்சி பூச்செடிகள் கருகின
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக காட்டுத் தீ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


