15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கோபியில் ரூ. 2.35 லட்சம் பறிமுதல்

கோபியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.35 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:54 pm

கோபியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.35 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொடிவேரி பகுதியில் தோ்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளி பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவபிரகாஷ் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் ஏளுா்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சோ்ந்த பாக்கு வியாபாரி சைதலவி (51) என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரு.1.35 லட்சத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.