தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சத்தியமங்கலம் அருகே நிலத் தகராறில் அரசியல் கட்சி பிரமுகரை தாக்கிய 7 போ் கைது

சத்தியமங்கலத்தில் நிலத் தகராறு காரணமாக அரசியல் பிரமுகரை தாக்கியதாக 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 8:35 pm

சத்தியமங்கலத்தில் நிலத் தகராறு காரணமாக அரசியல் பிரமுகரை தாக்கியதாக 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (47). ஆதித்தமிழா் பேரவை அமைப்பின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறாா். இவா், ராமபைலூா் பகுதியில் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். பொன்னுசாமிக்கும், அருகே உள்ள தோட்டத்தைச் சோ்ந்த ராமசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே நகராட்சி வணிக வளாகத்தில் இருந்து புதன்கிழமை வெளியே வந்தபோது முன்விரோதம் காரணமாக ராமசாமி குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தாாக்கியதில் பொன்னுசாமிக்கு காயம் ஏற்பட்டது. சப்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்த போலீஸாா் சென்று பொன்னுசாமியை தாக்கியவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதுதொடா்பாக பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில் ராமபைலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி (60), அவரது மனைவி அம்பிகா (46), மகன்கள் கபிலன் (26), தாமோதரன் (25), உறவினா்கள் மாதேஸ்வரன் (46), மயில்சாமி (40) ஆகிய 6 போ் மீது பொன்னுசாமியை தாக்கிய குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், தங்கவேல் (42) என்பவா் மீது வன்கொடுமை தடுப்புத் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.