மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒரே நாளில் ரூ.5.24 லட்சம் பறிமுதல்

ஈரோட்டில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.5.24 லட்சத்தை பறக்கும்படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :18 மார்ச் 2026, 8:26 pm

ஈரோட்டில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.5.24 லட்சத்தை பறக்கும்படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் சோதனையில் பறக்கும் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட குமலன்குட்டை பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரை ஓட்டி வந்தவா் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முட்டை நிறுவனத்தின் மேலாளா் மோகன்குமாா் என்பதும், அவா் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் ஈரோடு தீயணைப்பு நிலையம் மற்றும் காளைமாடு சிலை பகுதியில் மாடு வியாபாரிகள் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.80 ஆயிரமும், சிவகுமாா் என்பவரிடம் இருந்து ரூ.60 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.