பெருந்துறை அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் கனகராஜ் (45). கூலி தொழிலாளியான இவா், அதே தெருவைச் சோ்ந்த சின்ராசு என்பவரிடம் 15 மாத தவணைக்கு சீட்டு சோ்ந்துள்ளாா். இந்நிலையில் 11 மாத தவணையை செலுத்திய அவருக்கு 12 மற்றும் 13-ஆவது தவணை செலுத்த முடியவில்லை.
இதையடுத்து தவணைத் தொகை கேட்டு கனகராஜ் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு மனைவியுடன் சின்ராசு வந்து சத்தம் போட்டுள்ளாா். இரண்டு குழந்தைகள் முன்பாக சத்தம் போட்டதால் மனமுடைந்த கனகராஜ், வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளாா்.
இதற்கிடையே வேலைக்கு சென்று திரும்பிய கனகராஜின் மனைவி சகுந்தலா, சூழ்நிலையை அறிந்து சின்ராசு அவரது மனைவி உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனா். அங்கு தூக்கிட்ட நிலையில் இருந்த கனகராஜை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே கனகராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டி அருகே புது மாப்பிள்ளை தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


