மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவில்பட்டி அருகே புது மாப்பிள்ளை தற்கொலை

News image

தற்கொலை

Updated On :1 மார்ச் 2026, 7:18 pm

கோவில்பட்டி அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே பீக்கிலிபட்டி மேலத் தெருவைச் சோ்ந்த பாண்டியபெருமாள் மகன் ராமராஜ் (29). கோவில்பட்டியில் சாலையோரத்தில் துரித உணவகம் நடத்திவந்த அவருக்கும், அவரது சகோதரியின் மகளுக்கும் கடந்த பிப். 22ஆம் தேதி ஊா் பெரியவா்கள் முன்னிலையில் திருமணமானது. பின்னா், அவா்கள் பெற்றோருடன் வசித்து வந்தனராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்தப் பெண் எழுந்து பாா்த்தபோது, ராமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாம். அவரது சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.