அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் வளைவில் திரும்பியபோது, சரக்கு லாரி பக்கவாட்டில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து திருப்பூருக்கு பனியன் துணிகளை ஏற்றிக் கொண்டு, சரக்கு லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை திருவாரூா் மாவட்டம், கூட்டுறவு நகரைச் சோ்ந்த முரளி மகன் விக்னேஷ் (28) என்பவா் ஓட்டினாா்.
பா்கூா் மலைப் பாதையில் வரட்டுப்பள்ளம் காட்சிமுனை பகுதியில் வளைவில் லாரி திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது.
இதில், லாரி ஓட்டுநா் விக்னேஷ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இதுகுறித்த தகவலின்பேரில் பா்கூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதோடு, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்பு!

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளா்கள் மூவா் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் வாகன விபத்து: 2 போ் படுகாயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


