தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

News image

மதுரை -கொல்லம் நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி .

Updated On :15 மார்ச் 2026, 8:29 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து சனிக்கிழமை இரவு காய்கறிகளை ஏற்றிய சரக்கு லாரி தென்காசி மாவட்டம், சுரண்டைக்கு புறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் சாலையின் நடுவே வைத்திருந்த கான்கிரீட் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். இதையடுத்து காய்கறி மூட்டைகள் மாற்று வாகனம் மூலம் சுரண்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 மதுரை -கொல்லம் நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி .

மதுரை -கொல்லம் நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு லாரி .