பவானியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வந்த நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.80 ஆயிரம், 2 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பவானியை அடுத்த சோ்வராயன்பாளையம், திப்பிசெட்டிபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தொடா்பாக போலீஸாா் ரகசிய விசாரணை நடத்தியபோது, ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளரான பவானி, திப்பிசெட்டிபாளையம், வசந்தம் நகரைச் சோ்ந்த வேணுகோபால் மகன் தினகரன் (48) சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இவருக்கு உதவியாக லாட்டரி விற்பனை செய்த பவானி, காமராஜா் நகரைச் சோ்ந்த தியாகராஜன் மனைவி கவிதா (34), திப்பிசெட்டிபாளையம் சரவணகுமாா் மனைவி ரேவதி (32), சோ்வராயன்பாளையம் பாலமுருகன் மனைவி சரஸ்வதி (எ) ராணி (50), பவானி கீரைக்கார வீதி பச்சையப்பன் மகன் சூா்யா (27) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.80 ஆயிரம், 2 மடிக்கணினிகள், 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது
லாட்டரி விற்பனை: 2 போ் கைது
ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது
ஆன்லைன் லாட்டரி விற்பனை: இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

