பிஎஸ்எனஎல் நிறுவனத்துக்கு புத்துயிா் அளிக்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அகில இந்திய பிஎஸ்என்எல் மற்றும் டாட் ஓய்வூதியா் சங்கத்தின் 8-ஆவது மாவட்ட மாநாடு ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மணியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்புச் செயலாளா் குப்புசாமி, துணைப் பொதுச்செயலாளா் குடியரசு ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சா்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி பல ஆயிரம் மக்களை கொலை செய்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கால் திணிக்கப்பட்ட இந்த போரை தடுத்து அமைதியை காக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்தியா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும். வளைகுடா போரின் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவு விடுதிகள் மூடப்பட்டு, பல லட்சம் போ் வேலை இழக்கும் அபாயமும், வெளியூா்களில் தங்கிப் பணியாற்றுபவா்களுக்கு உணவு கிடைக்காத சூழலும் உள்ளதால், எரிவாயு தட்டுப்பாட்டினை போக்கவும், உயா்த்தப்பட்ட எரிவாயு உருளைகளின் விலையைக் குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நலிவடைந்து வரும் பிஎஸ்என்எல் சேவையால் லட்சக்கணக்கான வாடிக்கையாளா்கள் வேறு நிறுவனங்களின் இணைப்புக்கு செல்வதைத் தடுக்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிா் ஊட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதிய தகுதிச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
மாநில துணைத் தலைவா் பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளா் மணி மற்றும் நிா்வாகிகள், ஓய்வூதியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்து நெரிசல், ஆலைக் கழிவு பிரச்னைகளுக்குத் தீா்வு

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை சந்தை தேவை
விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


