லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம்

பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் மாவட்டத்  தலைவா்  சரவணன்.

Updated On :11 மார்ச் 2026, 8:31 pm

பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் உதயகுமரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வினோத், முன்னாள் மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பவானிசாகா் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினா் முழுவீச்சில் தோ்தல் பணியாற்றுவது, மத்திய கிழக்கில் போா் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புன்செய் புளியம்பட்டி காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் வெங்கடாசலம் உள்ளிட்ட வட்டாரத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.