தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மொடக்குறிச்சியில் கருணாநிதி சிலை: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வெண்கல சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

News image

மொடக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய அமைச்சா் சு.முத்துசாமி, எம்.பி. கே.இ. பிரகாஷ் உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 8:43 pm

மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வெண்கல சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனா்.

மொடக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுக்கு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்து, கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, சிலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை அமைச்சா் சு.முத்துசாமி திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், திருப்பூா் மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், அந்தியூா் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் திருவாசகம், ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.