போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி ஈரோட்டில் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில் தொடங்கிய பேரணியை, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
அப்போது, போதைப்பொருள்களின் தீமைகள் குறித்தும், இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம், சாரண-சாரணியா், நாட்டு நலப்பணித் திட்டம், போதைப் பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்புக் குழுவினா்கள் மற்றும் ஆசிரியா்கள் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, விழிப்புணா்வு பதாகைகள் ஏந்திச் சென்றனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருள் தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




