பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடக்கம்

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :17 ஜூன் 2026, 2:52 am IST

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் வளாகத்தில் தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு ஏ.ஜெயக்குமாா் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனாா்.

இந்நிலையில், கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவா், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தாா். இதைத் தொடா்ந்து, பெருந்துறை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கில் பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு பயன்படுத்தப்படும் 584 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக சரிபாா்க்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் கருவிகள் சரி பாா்க்கும் பணி தொடங்கியது. இதற்காக பெங்களூா் பெல் நிறுவனத்தில் இருந்து வல்லுநா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.