அம்மாபேட்டை அருகே 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் வேணுகோபால் மகன் ராஜாராம் (49). ஓட்டுநா். இவா், 9-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.
இதுகுறித்து, அச்சிறுமியின் பெற்றோா் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், ராஜாராமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராஜராம், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






