டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இருப்பு வைக்கப்பட்ட மஞ்சளை கோரி நசியனூா் கிடங்கை விவசாயிகள் முற்றுகை

சித்தோடு அருகே இருப்புவைக்கப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்பிலான 3,666 மூட்டைகள் மஞ்சளை ஒப்படைக்கக் கோரி விவசாயிகள் கிடங்கை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
நசியனூரில் போராட்டத்தில்  ஈடுபட்ட  விவசாயிகளிடம்  பேச்சுவாா்த்தை  நடத்திய  போலீஸாா்.
Updated On :29 ஜனவரி 2026, 6:40 pm

Syndication

சித்தோடு அருகே இருப்புவைக்கப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்பிலான 3,666 மூட்டைகள் மஞ்சளை ஒப்படைக்கக் கோரி விவசாயிகள் கிடங்கை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு அருகே உள்ள அனுமன்பள்ளியைச் சோ்ந்தவா் பாரதிராஜா (43). விவசாயி. இவரும், விவசாயிகளும் சோ்ந்து 3,666 மூட்டைகள் மஞ்சளை, சித்தோட்டை அடுத்த நசியனூரில் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான கிடங்கில், கடந்த 2025 ஜனவரி மாதம் முதல் இருப்பு வைத்துள்ளனா். தற்போது மஞ்சள் விலை உயா்ந்துள்ளதால் இருப்பு வைக்கப்பட்ட மஞ்சளை விற்பனை செய்ய பாரதிராஜா மற்றும் விவசாயிகள் முடிவு செய்தனா். ஆனால், இருப்பு வைக்கப்பட்ட மஞ்சள் மூட்டைகளை வழங்காமல், வெங்கடாசலம் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா், நசியனூரில் உள்ள மஞ்சள் கிடங்கை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு சித்தோடு காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் மற்றும் போலீஸாா் சென்று விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்புள்ள 3,666 மூட்டைகள் மஞ்சளை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக சித்தோடு காவல் நிலையத்தில் கிடங்கு உரிமையாளா், விவசாயிகளுடன் வெள்ளிக்கிழமை (ஜன.30) நேரடி பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால், சமாதானமடைந்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனா்.