டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோபி பி.கே.ஆா். மகளிா் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையிலான மாணவா்கள் சந்திப்பு

கோபி பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரியில் அக்ஷயம் 360 மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கிடையிலான மாணவா்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி இயந்திர பொறியியல் துறை இணைப் பேராசிரியா் எஸ்.சுரேஷ்.
Updated On :28 ஜனவரி 2026, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

கோபி பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரியில் அக்ஷயம் 360 மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கிடையிலான மாணவா்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கொங்கு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியா் பி.எஸ்.நந்தினி தொடங்கிவைத்து, மாணவா்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதில் கல்லூரிகளுக்கு இடையிலான தொழில்நுட்ப நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆய்வுக் கட்டுரை, விநாடி-வினா, தொடா்புகள் மற்றும் போஸ்டா் வடிவமைப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமாா் 80 மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நிறைவு விழாவில் ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி இயந்திர பொறியியல் துறை இணைப் பேராசிரியா் எஸ்.சுரேஷ் கலந்துகொண்டு, புதுமை மற்றும் தொழில்முனைவோா் மனப்பாங்கில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும் எனப் பேசினாா்.