டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொடச்சூா் கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதம்

கோபி அருகே உள்ள மொடச்சூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வருவாய்த் துறை அலுவலா்கள்

News image
அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated On :26 ஜனவரி 2026, 10:13 pm

Syndication

கோபி: கோபி அருகே உள்ள மொடச்சூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அரசு வழங்கிய பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வருவாய்த் துறை அலுவலா்கள் அலைக்கழிப்பதாக கூறி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கோபி அருகே உள்ள மொடச்சூா் ஊராட்சியில் ஊராட்சி செயலா் ராஜாமணி தலைமையில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது மொடச்சூா் ஊராட்சிக்கு உள்பட்ட வடுகபாளையம் பகுதி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாததால் புதிய வீடு கட்ட முடியவில்லை. மேலும், அதிகாரிகள் தங்களை அலைக்கழிக்கின்றனா் எனக் கூறி பொதுமக்கள் அலுவலா்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணி நேரம் மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அலுவலா்கள், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். மேலும் 100 நாள் வேலைக்கு ஊதியம் வழங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆவதால் உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.