டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புன்செய்புளியம்பட்டி செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

News image
சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் கத்தி போட்டுச் சென்ற இளைஞா்கள்.
Updated On :16 ஜனவரி 2026, 8:43 pm

Syndication

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

புன்செய்புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற செளடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பொங்கல் விழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவின் முதல் நிகழ்வாக புதன்கிழமை கத்தி போடும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து ஊத்துக்குளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி அழைப்பும் நடைபெற்றது.

சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் வீரவாளுடன் நடனமாடி வேண்டுதலை நிறைவேற்றினா். இந்த ஊா்வலமானது, கோவை சாலை, பவானிசாகா் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று செளடேஸ்வரி அம்மன் கோயிலை அடைந்தது.

விவசாயம், கைத்தறி நெசவுத் தொழில் செழிக்கவும் நோ்த்திக் கடனாக திருவிழா நடத்தப்படுவதாக விழா குழுவினா் தெரிவித்தனா்.