தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சென்னிமலை ஒன்றியத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு

சென்னிமலையில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு பகுதிநேர நியாயவிலைக் கடை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

News image
சென்னிமலை ஒன்றியம், பாரவலசில் பகுதிநேர நியாயவிலைக் கடையை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய அமைச்சா் சு. முத்துசாமி உள்ளிட்டோா்.
Updated On :2 ஜனவரி 2026, 10:25 pm

Syndication

சென்னிமலையில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு பகுதிநேர நியாயவிலைக் கடை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

சென்னிமலை ஒன்றியம், புங்கம்பாடி நியாயவிலைக் கடை 1,254 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது. இந்தக் கடைக்கு பாரவலசு பகுதியில் இருந்து பொதுமக்கள் சுமாா் 4 கி.மீ. தூரம் வந்து அத்தியாவசியப் பொருள்களை பெற்றுச் சென்றனா். எனவே, பொதுமக்களின் பயண துாரத்தை குறைக்கும் வகையில், அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே புதிதாக பகுதிநேர நியாயவிலைக் கடை அமைத்து தருமாறு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்பேரில், பாரவலசு பகுதியில் சுமாா் 250 குடும்ப அட்டைகள் கொண்டு பிரிக்கப்பட்டு, பகுதிநேர நியாயவிலைக் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் சு.முத்துசாமி கலந்துகொண்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, உருமாண்டம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடை கட்டடத்தையும் திறந்துவைத்தாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கந்தராஜா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.