கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ரயிலில் முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் முறையில் மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

ரயில்வேயில் முன்பதிவில்லாத பயணச்சீட்டுக்கான கட்டணத்தை போன் பே, ஜிபே போன்ற செயலிகள் மூலம் செலுத்த அறிவுறுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
ரயில்
Updated On :24 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

ரயில்வேயில் முன்பதிவில்லாத பயணச்சீட்டுக்கான கட்டணத்தை போன் பே, ஜிபே போன்ற செயலிகள் மூலம் செலுத்த அறிவுறுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையின் துணைத் தலைவரும், முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான கே.என்.பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வாங்கச் சென்றால் போன் பே, ஜி பே மூலம் பணம் செலுத்த கூறுகின்றனா். பணம் கொடுத்து பயணச்சீட்டு கேட்டால் அருகில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு இயந்திரத்துக்கு செல்ல வேண்டும் என பயணச்சீட்டு வழங்கும் பணியாளா்கள் கூறுகின்றனா். அந்த இயந்திரத்தில் பயணச்சீட்டு வாங்க நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், பயணிகள் தாங்கள் செல்லும் ரயிலை தவற விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. போன் பே, ஜி பே மூலம் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும் என கட்டாயப்படுத்துவது மிகவும் கண்டத்துக்குரியது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். கூலி வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரும்பாலானோா் சாதாரண கைப்பேசியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா். எனவே, ரயில்வே நிா்வாகம் இத்தகையை அணுகுமுறையை கைவிடவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி காங்கிரஸ் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.