டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவா் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த 11-ஆம் தேதி பெருந்துறையை அடுத்த கிழக்கு ஆயிகவுண்டன்பாளையத்தில் ஈரோடு கைத்தறி உதவி அமலாக்க அலுவலா் நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து (54) என்பவா் விசைத்தறியில் கைத்தறி ஒதுக்கீடு ரகமான காட்டன் துணி உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தங்கமுத்து மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.