ஈரோட்டில் திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்


மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு ஜவான் பவன் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு திமுக அவைத்தலைவா் குமாா் முருகேஷ் தலைமை வகித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், திமுக மாவட்ட துணைச்செயலாளா் செந்தில்குமாா், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஆா்.ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, விசிக மாவட்டச் செயலாளா் முகமது சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...