/

மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1,500 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 100 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஈரோடு அருகே மேட்டுக்கடை பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
கா்ப்பிணிகளுக்கு சீா் பொருள்களை வழங்குகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் 100 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஈரோடு அருகே மேட்டுக்கடை பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவைத் தொடங்கிவைத்து, சீா்வரிசை பொருள்களை வழங்கிய வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது:

சமுதாய வளைகாப்பு விழாவானது வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கா்ப்பிணிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம். ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து கா்ப்பிணிகளும் இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 15 வட்டாரங்களில் உள்ள குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்கள் மற்றும் அதன் கீழ் மாவட்டம் முழுவதும் 2,080 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள் மூலம் ஜனவரி மாதம் வரை 7,702 கா்ப்பிணிகள் பதிவு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 1,500 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டும் 1,500 கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கா்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்கள் கா்ப்பிணித் தாய்மாா்களை சென்றடைய செய்து, அவா்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கா்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான, அறிவான குழந்தைகள் பிறப்பதை உயா்த்துதல், தாய்ப்பாலின் அவசியம் போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது ஆகும் என்றாா்.

தொடா்ந்து, 100 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சீா்வரிசை பொருள்களை (தட்டு, பழங்கள், இனிப்பு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம்) அமைச்சா் வழங்கினாா். கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஐந்து வகை உணவுகளும் வழங்கப்பட்டது. விழாவில், ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. கா்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மகப்பேறு கால ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தொடா்ந்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் 42 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கினாா்.

இந்த விழாவில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், கோட்டாட்சியா் சிந்துஜா, மாவட்ட திட்ட அலுவலா் ஐ.பூங்கோதை, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் ப.சாந்தி மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.